Saturday, 29 November 2014

நடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர் அவான் குமார் கைது

திருமணம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றி கற்பழித்துவிட்டதாக டிவி நடிகர் அவான் குமார் மீது போலீசில் புகார் செய்துள்ளார் நடிகை ஒருவர்.

அந்த நடிகையின் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

நடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர் அவான் குமார் கைது

இந்தி, தெலுங்கில் முன்னணி டெலிவிஷன் நடிகராக இருப்பவர்தான் இந்த அவான் குமார். நிறைய டி.வி. தொடங்களில் நடித்துள்ளார். இவர் மீது சக நடிகை ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அவான் குமார் தன்னுடன் நெருக்கமாக பழகினார் என்றும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னை கற்பழித்து விட்டார் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். அவானால் இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவான் குமாரை கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் அவான் நிறைய பெண்களை இதுபோல் ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

காவியத் தலைவன் விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர், தம்பி ராமையா, சிங்கம்புலி, அனைகா சோதி

ஒளிப்பதிவு: நீரவ் ஷா

கலை: சந்தானம்

எடிட்டிங்: பிரவீண்

பிஆர்ஓ: நிகில்

கதை வசனம்: ஜெயமோகன்

இயக்கம் : ஜி வசந்த பாலன்

சினிமாவில் இலக்கியம் படைக்க முயலும் வசந்த பாலனும், இலக்கியவாதி ஜெயமோகனும் இந்த காவியத் தலைவனைப் படைக்க கைகோர்த்திருக்கிறார்கள். அங்காடித் தெருவில் மக்களைக் கவர்ந்த இந்தக் கூட்டணி, காவியத் தலைவனில் அதே வெற்றியைப் பெற்றிருக்கிறதா... பார்க்கலாம்!

ஒரு நாடகக் குழுவில் காளியப்பா (சித்தார்த்), கோமதி நாயகம் (பிருத்விராஜ்) இரு நாயகர்கள்... காளியின் வளர்ச்சி, முக்கியத்துவம் பார்த்து கோமதிக்கும் பெரும் பொறாமை.. அது பெரும் பகையாக மாறுகிறது.. அந்தப் பகையின் முடிவு என்ன? இந்த ஒன்லைனோடு நிறுத்திக் கொள்வது நலம். அதை மீறினால் படத்தின் முழுக் கதையையும் வரிக்கு வரி சொல்ல வேண்டி வரும். சொன்னாலும் அத்தனை சுவாரஸ்யமாக இருக்குமா தெரியாது!

காவியத் தலைவன் விமர்சனம்

முழுக்க முழுக்க கற்பனைக் கதையாக ஒன்றை எடுத்தால், அதை நம்ப வைக்க எந்த சிரமமும் தேவையில்லை. காட்சிகள் சுவாரஸ்யமாக அமைந்தால் போதும். ஆனால் சங்கரதாஸ் சுவாமிகள், எஸ் ஜி கிட்டப்பா, கேபி சுந்தராம்பாள் போன்ற நிஜ நாயகர்களையும், சுதந்திரப் போராட்டம் என்ற சமீபத்திய வரலாற்றையும் ஒட்டி ஒரு படம் எடுக்கும்போது, ரொம்பவே பிரத்யேக கவனம் தேவை. வசந்த பாலன் இங்குதான் சறுக்கியிருக்கிறார், காவியத் தலைவனில்.

சுதந்திரப் போராட்டத்தின் முதல் தீ பற்றிய இடமே தமிழகத்தின் வேலூர் என்ற அடிப்படை உண்மையைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட உணர்வே இல்லை என்று வசனம் வேறு வைத்திருக்கிறார் இந்தப் படத்தில்.

காவியத் தலைவன் விமர்சனம்

பிரதான நாயகன் காளியப்பாவுக்கு திடீரென சுதந்திரப் போராட்ட உணர்வு பொங்குவதுதான் ஆச்சர்யம் (குறைந்தபட்சம் இதற்கு ஒரு முன்குறிப்பாவது வைத்திருக்கலாம்). அதைவிட ஆச்சர்யம், ஒரு பிராந்தியத்தின் மன்னருக்கு நிகரான ஒருவரின் மகளை அவர் சர்வசாதாரணமாக, அதுவும் அரண்மனைக்கே போய் காதலிப்பதும் சல்லாபிப்பதும்!

படத்தில் ராஜபார்ட்டாக வரும் பொன்வண்ணன், காளியாக வரும் சித்தார்த், கோமதியாக வரும் பிருத்வி ராஜ், வடிவாக வரும் வேதிகா... இவர்கள் அடிக்கடி ஏதாவது ஒரு காட்சியில் பிரமாதமாக நடித்துவிட்டதாக ஒருவரையொருவர் புகழ்ந்து கொண்டோ, அல்லது பொறாமை கொண்டோ பேசுகிறார்கள். பார்வையாளர்களுக்கு அப்படி ஒரு உணர்வே இல்லை என்ற உண்மை புரியாமலே!

காவியத் தலைவன் விமர்சனம்

சுதந்திரப் போராட்ட காலத்தில் அல்லது முப்பதுகளின் இறுதியில், எந்த நாடகக் குழுவையும் போலீஸ் துரத்தித் துரத்தி சுட்டுக் கொன்றதாக பதிவுகளே இல்லை. நாடகக் கலைஞர்களுக்கு சுதந்திர வேட்கை இருந்தாலும், அது இந்தப் படத்தில் காட்டப்பட்ட அளவு மிகையாக இருந்ததில்லை என்கிறது வரலாறு!

எண்பது - தொன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைக் காட்டும்போது, அதன் நம்பகத் தன்மையை நிரூபிக்க, அக்காலத்து மொழிப் பழக்க வழக்கத்தை -முழுவதும் இல்லாவிட்டாலும்- ஓரிரு இடங்களிலாவது பதிவு செய்திருக்கலாம். ஐம்பதுகளில் வந்த படங்களில் கூட 'ப்ராண நாதா', 'சகியே' என்று வசனங்கள் பேசிக் கொண்டிருக்க, இந்த முப்பதுகள் நாடகத்திலோ சாதாரண பேச்சுத் தமிழையே பயன்படுத்தியிருக்கிறார் வசந்த பாலன்.

காவியத் தலைவன் விமர்சனம்

இந்த மாதிரிப் படங்களுக்கு முக்கிய பலம் வசனம். காவியத் தலைவனுக்கு அந்த பலம் இம்மி கூட கிடைக்கவில்லை.

இசை... கதை வலுவாக இல்லாமல் போனாலும், இப்படியொரு பலமான களம் அமைந்ததை ஏஆர் ரஹ்மான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாரா என்றால்... இல்லை என்பதே உண்மை. வேதிகா அறிமுகமாகும் அந்த குறும்பாடலும், யாருமில்லா தனியரங்கில் பாடலும் தவிர வேறெதுவும் மனதின் ஓரத்தைக் கூடத் தொடவில்லை. பின்னணி இசையில் தெரியும் நவீனத்துவம் கதை நிகழும் காலகட்டத்தை மறக்கடித்துவிடுகிறது.

காவியத் தலைவன் விமர்சனம்

கலை இயக்குநருக்கு ஏக வேலை இந்தப் படத்தில். மேடைகள், திரைச் சீலைகள், ஓவியங்கள் அத்தனையும் புத்தம் புதிதாக ஜொலிக்கின்றன. ஆனால் அன்றைய பாய்ஸ் கம்பெனி நாடகக்காரர்களுக்கு வாய்க்காத வசதியல்லவா இது!

நடிப்பில் நாசருக்குத்தான் முதலிடம். அலட்டிக் கொள்ளாமல், தேவைப்படும் இடத்தில் மட்டும் ஆவேசம் காட்டி, தன் தவறு உணர்ந்து ஒடுங்கி வீழும் காட்சிகளில் அசத்துகிறார் மனிதர்.

காவியத் தலைவன் விமர்சனம்

பிருத்விராஜுக்குதான் படத்தில் அதிக காட்சிகள். அவரும் மலையாள வாடையில் தமிழைப் பேசி கவரப் பார்க்கிறார். பேசும் முறையில் அந்த வாடை இருந்தாலும், சுத்தமாகவே பேசியிருக்கிறார். அந்த சிரத்தைக்கு பாராட்டுகள். இறுதிக் காட்சியில் மட்டும் மனதைத் தொடுகிறது அவர் நடிப்பு.

காளியப்ப பாகவதர் சித்தார்த்துக்கு இது ஓவர் டோஸ். சூரபத்மனாக வரும் அந்தக் காட்சியும், குருவுக்கே சாபம் விடும் இன்னொரு காட்சியும் அவரது சிரத்தையான நடிப்புக்கு சாட்சி. ஆனால் 'தீயா வேலை செய்யும் இந்த குமாரை' ஒரு காவியத் தலைவனாக ஏற்க முடியாமல் போனதற்கான காரணங்கள் நிறைய!

வேதிகா... சிவதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவின் செட் ப்ராபர்ட்டி மாதிரிதான் வருகிறார். ஒரு காட்சியில் தன் நடிப்பு எப்படி இருக்கிறது என சித்தார்த்தை அவர் கேட்பார். 'நீ அழகா இருந்தே.. அவ்வளவுதான்' என்று கூறி நடிப்பை சகட்டு மேனிக்கு திட்டுவார். அடுத்த சில காட்சிகளுக்குப் பிறகு, ஒரு சுதேசி நாடகத்தில் வேதிகா தேசியக் கொடி பிடித்தபடி கும்பலோடு வந்து கோஷமிட்டுப் போவார். அடுத்த காட்சியில் மீண்டும் 'தன் நடிப்பு எப்படி' என்பார். இந்த முறை, 'அழகா, அற்புதமா நடிச்சே' என்பார் சித்தார்த். அந்த 'அழகா அற்புதமா நடிச்ச' காட்சியைக் காண சித்தார்த்துக்குக் கொடுத்து வைத்த அளவுக்கு, ரசிகர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை!!

ஒரே மாதிரி நடிப்பது தம்பி ராமையாவுக்கு வேண்டுமானால் திகட்டாமல் இருக்கலாம்... ரசிகர்களையும் கொஞ்சம் மனசுல நினைச்சிக்கிட்டு ரூட்டை மாத்தலாமே ராமையா!

குறைந்தபட்சம் சிங்கம்புலியையாவது முழுமையாக காமெடி செய்ய விட்டிருக்கலாம். பொன்வண்ணன் வெளியேறும் காட்சி அப்படியே நாசரின் அவதாரத்தை நினைவூட்டுகிறது.

காவியத் தலைவன் விமர்சனம்

இன்னொரு நாயகியாக வரும் அனைகா, ஏதோ ஸ்கூல் பிள்ளை மாதிரிதான் தெரிகிறார். அந்தப் பிள்ளைக்கே ஒரு 'பிள்ளை கொடுக்கும்' சித்தார்த் மீது எப்படி பரிதாபம் வரும்?

மேடைக் காட்சிகளிலும், யாருமில்லா தனியரங்கில் பாடல் காட்சியிலும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு கிறங்கடிக்கிறது. ஆனால் அந்த சுதந்திரப் போராட்ட காட்சிகளில் நூறு சதவீத நாடகத்தனத்தை துல்லியமாகக் காட்டிவிடுகிறது.

நல்ல சினிமா, ஆபாசமில்லாத சினிமா என்ற வசந்த பாலனின் பிடிவாதம் நல்லதுதான். அதுவும் சினிமாவின் ஆதியான நாடகக் கலையின் வரலாற்றை, இரு நாயகர்களின் வழி நின்று சொல்லும் இந்த முயற்சி கூடப் பாராட்டத்தக்கதே. ஒரு வரலாற்று பதிவு மாதிரி. ஆனால் பிழைகளற்ற, நம்பகத்தன்மை மற்றும் சுவாரஸ்யமான காட்சி நகர்வுகளில்தான் அந்த சினிமாவின் வெற்றி இருக்கிறது. அப்படியொரு வெற்றிக்கான வாய்ப்பு மடியில் வந்து விழுந்தும் அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே. இன்னொரு முறை இப்படியொரு வாய்ப்புதான் கிட்டுமா?

அரவானில் உணராத இந்த உண்மைகளை, காவியத் தலைவனிலாவது உணர்வாரா வசந்த பாலன்!

Ungli Review

Read more »

Ungli First Day Box Office Collection: Low Opening

Read more »

Zid Review

Read more »

Zid First Day Box Office Collection: Poor opening

Read more »

ராஜ்குமார் இறந்த ஆண்டை மாற்றி பேசிய ரஜினிகாந்த்! நினைவு மண்டப திறப்பு விழாவில் பரபரப்பு

பெங்களூரு: நடிகர் ராஜ்குமார் நினைவு மண்டப திறப்பு விழாவில் பங்கேற்க வந்த ரஜினிகாந்த் தனது சிறப்புரையின்போது ராஜ்குமார் இறந்த வருடத்தையே மாற்றி பேசியது ராஜ்குமார் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ராஜ்குமாரின் நினைவு மண்டபம் ரூ.7 கோடி செலவில் பெங்களூரு நந்தினி லேஅவுட்டில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடந்தது. முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அந்த விழாவில் ராஜ்குமார் குடும்பத்தார் மட்டுமின்றி, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நடிகைகள் சரோஜாதேவி, தாரா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான ராஜ்குமார் ரசிகர்களும் கூடியிருந்தனர்.

ராஜ்குமார் இறந்த ஆண்டை மாற்றி பேசிய ரஜினிகாந்த்! நினைவு மண்டப திறப்பு விழாவில் பரபரப்பு

அந்த கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் "பேடர கண்ணப்பா என்ற படத்தில் தொடங்கி ராஜ்குமார் என்ற குதிரை ஓடத் தொடங்கியது. 1954ல் தொடங்கிய ராஜ்குமார் என்ற குதிரையின் சினிமா பயணம் 2008ல் முடிந்தது. அதாவது, அவர் சினிமா பயணத்தை தொடங்கிய ஆண்டில் 54ம் எண் வருகிறது. அவரது கேரியரும் 54 வருடம் தொடர்ந்தது" என்றார்.

ஆனால் நடிகர் ராஜ்குமார் இறந்தது, 2006ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதியாகும். ராஜ்குமாரின் சினிமா அனுபவத்தையும், அவர் நடிக்க ஆரம்பித்த வருடத்தையும் 54ம் எண்ணுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு விவரங்களை சேகரித்து தயாராக வந்திருந்த ரஜினிகாந்த், எப்படி ராஜ்குமார் இறந்த ஆண்டை தவறாக கணக்கிட்டார் என்பது புரியவில்லை.

ராஜ்குமார் இறந்த ஆண்டை மாற்றி பேசிய ரஜினிகாந்த்! நினைவு மண்டப திறப்பு விழாவில் பரபரப்பு

வெறுமனே, 2008 என்று கூறியிருந்தால் கூட வாய் தவறி அப்படி ரஜினிகாந்த் சொல்லியிருக்கலாம் என்று ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் 54 என்ற எண்ணை ஒப்பிட்டு பேசிய ரஜினி எப்படி தவறிழைக்கலாம் என்று பொறுமுகின்றனர் ராஜ்குமார் ரசிகர்கள். ஏனெனில் பேடர கண்ணப்பா திரைப்படம் வெளியானது ரஜினிகூறியபடியே 1954ம் ஆண்டுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் கெட்டப்பில் சிம்புவுடன் நடனமாடும் சரோஜா தேவி

சென்னை: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, எம்ஜிஆர் கெட்டப்பில் சிம்புவுடன் நடனம் ஆடுகிறார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் தயாராகி வரும் படம் 'வாலு'. தமன் இசையமைத்துள்ள, இப்படத்தை எஸ்.சக்கரவர்த்தி தயாரித்து வருகிறார். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது.

எம்ஜிஆர் கெட்டப்பில் சிம்புவுடன் நடனமாடும் சரோஜா தேவி

'தாறு மாறு' பாட்டு

தற்போது இப்படத்தின் டப்பிங் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் முடிந்திருக்கிறது. இன்னும் 'தாறுமாறு' என்ற பாடல் மட்டுமே எடுக்க வேண்டுமாம்.

எம்ஜிஆர், ரஜினி, அஜீத்

இப்பாடலில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் ஆகியோரது கெட்டப்களில் தோன்றி நடனமாட இருக்கிறார். இதில் ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஒவ்வொரு நடிகை நடனமாடுகிறார்கள்.

சரோஜா தேவி

இதில் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் நடனமாடுவதற்கு பழம்பெரும் நடிகை சரோஜாதேவி சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் இப்பாடலின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

குஷ்பு, அஜீத்

ரஜினி கெட்டப்பிற்கு குஷ்பு, அஜித் கெட்டப்பிற்கு சிம்ரனை ஒப்பந்தம் செய்யப் போகிறார்களாம். இந்தப் பாடலில் நயன்தாராவும் சிறப்புத் தோற்றம் தருகிறாராம்.

மீண்டும் தள்ளிப் போனது சிம்புவின் வாலு

மீண்டும் தள்ளிப் போனது சிம்புவின் வாலு   

ஆனால் இப்போது படம் மீண்டும் தள்ளிப் போய்விட்டது. வரும் பிப்ரவரி 3-ம் தேதி சிம்பு பிறந்த நாளையொட்டி இந்தப் படத்தை வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

சிம்பு நடித்த மூன்று படங்கள் வெளிவராமல் உள்ளன. வாலு தவிர, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு படங்கள் எப்போது வெளியாகும் என்றே தெரியாத நிலை உள்ளது.

விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்துள்ளார்.

பாகிஸ்தான் நடிகருடன் ஜோடியாகப்போகும் லிங்கா நாயகி

மும்பை: பாகிஸ்தான் நடிகர் பவாத் கான், ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்துள்ள சோனாக்ஷி சின்காவுடன் ஜோடி சேர போகிறாராம்.

பாகிஸ்தான் நடிகருடன் ஜோடியாகப்போகும் லிங்கா நாயகி

பாலிவுட்டில் வெளியான ஹுப்சூரத் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் வரவேற்பை பெற்றவர் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் பவாத்கான். இப்போது பாலிவுட்டில் கவிஞர் அம்பிரித்தா பிரீதம் வாழ்க்கை குறித்து எடுக்கப்பட உள்ள திரைப்படத்தில் நடிக்க உல்ளார். அப்படத்தில் பெண் கவிஞர் அம்பிரித்தாவாக நடிக்க உள்ளவர் சோனாக்ஷி சின்கா.

சோனாக்ஷி அடுத்த மாதம் வெளியாக உள்ள லிங்கா திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார். எனவே ரஜினிகாந்த் ஜோடி நடிகை பாகிஸ்தான் நடிகரின் ஜோடியாக போவதால் இரட்டிப்பு எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள்.

லிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்!

ரஜினியின் லிங்கா படத்துக்கு சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து இசை அமைத்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள லிங்கா படம் சென்சார் முடிந்து யு சான்று பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு படத்தை உருவாக்கியுள்ளனர்.

லிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்!

இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக ஆடியோ சிடி விற்பனை என்பதே இல்லாமல் போய்விட்ட இந்த காலகட்டத்தில், லிங்கா சிடிக்கள் விறுவிறுப்பாக விற்று வருகின்றன.

டிசம்பர் 12-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் இன்னொரு சிறப்பம்சம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை.

இந்தப் படத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் மாசிடோனியன் ரேடியோ சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவைக் கொண்டு, சிம்பொனி இசை தந்திருக்கிறாராம் ஏ ஆர் ரஹ்மான்.

கமலின் ஹே ராமுக்காக இளையராஜா முன்பு ஹங்கேரிக்குப் போய் சிம்பொனி இசை அமைத்தார். அவருக்குப் பிறகு, ஏ ஆர் ரஹ்மான் இப்போது ரஜினி படத்துக்கு சிம்பொனி இசையை பின்னணியாகத் தருகிறார்.

யானைத் தந்தங்கள் பதுக்கிய மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதா...? வலுக்கும் எதிர்ப்பு!

திருவனந்தபுரம்: 26 யானைத் தந்தங்களை வீட்டுக்குள் வைத்திருந்த மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது தரலாமா? என எதிர்ப்பு தெரிவித்துள்ளது விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு.

நடிகர் மோகன் லாலுக்கு பத்ம பூஷன் விருது வழங்க கேரள அரசு பரிந்துரை செய்துள்ளது.

யானைத் தந்தங்கள் பதுக்கிய மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதா...? வலுக்கும் எதிர்ப்பு!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யானை தந்தங்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்ததாக நடிகர் மோகன்லால் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்தி 13 ஜோடி யானை தந்தங்களையும் கைப்பற்றினார்கள். இது பற்றிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து 2 ஆண்டுகளுக்கு முன் பேட்டி அளித்த மோகன் லால், யானை தந்தங்கள் கடந்த 26 வருடங்களாக எனது வீட்டில் உள்ளன. இது குறித்து பல பத்திரிகைகளில் கட்டுரைகள் வந்துள்ளன. இதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ள்ன. இது சட்டவிரோதமானதும் அல்ல," என்றார்.

தற்போது பேட்டி அளித்த மோகன்லால் இது வன சட்டப்படி எனது நண்பர்கள் இதை எனக்கு பரிசாக அளித்தனர், என்றார்.

இந்த நிலையில் மோகன் லாலுக்கு பத்மபூஷன் விருது வழங்க கேரள அரசு சிபாரிசு செய்துள்ளது. யானைத் தந்தங்களைப் பதுக்கியவருக்கு பத்மபூஷன் விருது வழங்குவது ஏற்புடையது அல்ல என்று விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு எதிர்த்துள்ளது. இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த அமைப்பின் செயலாளர் பி.கே. வெங்கடாசலம் இதுகுறித்துக் கூறுகையில், "மோகன்லால் 13 ஜோடி யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்தார். கொச்சியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வனத் துறையினர் இவற்றைக் கைப்பற்றினார்கள். யானை தந்தங்கள் வைத்துக் கொள் வதற்கு வனத்துறையிடம் இருந்து முறையான லைசென்ஸ் அவர் வாங்கவில்லை.

இந்த வழக்கில் மோகன் லால் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார். இது சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே அவருக்கு உயரிய பத்மபூஷன் விருதை கொடுக்க கூடாது," என்றார்.

ரஜினியின் 'தத்து அப்பா' பங்கேற்கும் 'பெருமாள் கோயில் உண்டசோறு'!

பாலம் கல்யாணசுந்தரம்... இவரைத் தெரியாதவர்கள் ரொம்ப குறைவாகத்தான் இருப்பார்கள்.

பணியில் இருந்து சம்பாதித்த சம்பளம் முழுவதையும் அப்படியே பாலம் அமைப்புக்கு அளித்தார். அவரது சேவையை பாராட்டி அமெரிக்கா பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியது. அதையும் அப்படியே அறக்கட்டளைக்குக் கொடுத்து விட்டார்.

ரஜினியின் 'தத்து அப்பா' பங்கேற்கும் 'பெருமாள் கோயில் உண்டசோறு'!

இவரது உயரிய சமூக சேவையை கௌரவிக்கும் பொருட்டு நடிகர் ரஜினிகாந்த் இவரை தனது அப்பாவாக தத்தெடுத்துக் கொண்டார்... அவருக்கு பணமும் விலை உயர்ந்த பொருட்களும் வழங்கினார். அதையெல்லாம் அப்படியே பாலம் அமைப்பிற்கு வழங்கி விட்டார். அப்படிப் பட்டவர் முதல் முறையாக ஒரு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அடுத்த தலைமுறைக்கு நாம் சேத்து வைக்க வேண்டியது சுற்றுச்சூழல், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு போன்றவைதான் என்பதை வலியுறுத்தும் பெருமாள் கோயில் உண்டசோறு என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாலம் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு இசையை வெளியிடுகிறார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை எம்ஆர் தியேட்டர் - கிங்ஸ்டன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

சந்தோஷ்குமார், பாபுஜி, வி.டி.ராஜா, கீர்த்தி, சுமோசிவா, டான்ஸ்ராஜா, ஹரே ராம் சக்கரவர்த்தி, அகிலா என படத்தின் அத்தனை நடிகர் நடிகர்களும் புதுமுகங்களே.

டிஜே ஒளிப்பதிவு செய்ய, ஆர் ஆர் கார்த்திக் - பாலபாரதி இசை அமைக்கின்றனர். எழுதி இயக்குகிறார் விடி ராஜா.

படம் குறித்து இயக்குநர் விடி ராஜா கூறுகையில், "படத்தில் மக்களுக்கு உபயோகமான ஒரு கருத்தைச் சொல்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நாம் வீடு, பணம், கார், தோட்டம் என்று சேர்த்து வைக்கிற எதுவுமே உபயோகமில்லாததாகி விடும். நாம் சேத்து வைக்க வேண்டியது சுற்றுச்சூழல், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு போன்றவைதான்.

சுற்றுச் சூழலலுக்கு முதல் எதிரி பிளாஸ்டிக்தான். இந்த கருத்தைத்தான் இந்தப் படத்தின் மூலம் சொல்கிறோம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பாலம் அமைப்பின் கல்யாணசுந்தரத்தை அழைத்தோம். படம் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டதும் வரச் சம்மதித்தார்.

டிசம்பர் 1-ம் தேதி காலை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் கல்யாணசுந்தரம் முன்னிலையில் இயக்குனர் பேரரசு இசைத்தட்டை வெளியிட இயக்குனர்கள் எஸ்.ரவிச்சந்திரன், ஜே.சுரேஷ் ஆகியோர் பெற்றுக்கொள்கிறார்கள்," என்றார்.

"எனது வாழ்க்கையிலேயே ஒரே ஒருவரிடம்தான் ஆட்டோகிராப் வாங்கியுள்ளேன்"- ரஜினிகாந்த் வெளியிட்ட ரகசியம்

பெங்களூரு: கன்னட நடிகர் ராஜ்குமாரின் நினைவு மண்டபம், சிலை திறப்பு விழாக்கள், பெங்களூரு, நந்தினி லே-அவுட் பகுதியிலுள்ள அவரது நினைவிடத்தில் இன்று நடந்தன. ராஜ்குமார் நினைவிடத்தில் அணையா தீபம் ஏற்றப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜார்ஜ், செய்தி விளம்பர துறை அமைச்சர் ரோஷன் பெய்க், எம்.எல்.ஏக்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை சரோஜாதேவி, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

விழாவில் சிறப்புரையாற்றிய ரஜினி கூறியதாவது: 1927ல் பிரம்மா தேன் ஒன்றை உருவாக்கி அதை மேகத்தில் தூவினார். அந்த தேனுக்கு கலைகளின் தலைவி சரஸ்வதி ஆசிர்வாதம் செய்தார். அந்த மேகத்தில் இருந்து தேன் மழை எங்கு பெய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தபோது, கர்நாடகாவுக்கு அந்த புண்ணியம் கிடைத்தது. கன்னட மண்ணில் தேன் மழை விழுந்தது. ரங்கமந்திராவில் நடிப்பு பயிற்சி பெற்று, ஒரு மனிதனாக உருவாகி 1954ல் சினிமா உலகில் குதித்தது அந்த மழை. அந்த தேன் மழையின் பெயர்தான் ராஜ்குமார்

பேடர கண்ணப்பா என்ற படத்தில் தொடங்கி ராஜ்குமார் என்ற குதிரை ஓடத் தொடங்கியது. 1954ல் தொடங்கிய ராஜ்குமார் என்ற குதிரையின் சினிமா பயணம் 2008ல் முடிந்தது. 54 வருஷம் திரையுலகில் அவர் இருந்தார். புரந்தரதாசர், கனகதாசர் உள்ளிட்ட பல ஞானிகள் (கதாப்பாத்திரங்கள்) அந்த குதிரையின் முதுகில் ஏறி பயணித்தனர்.

ராவணன், இரண்யன், மகிஷாசூரன் போன்ற கொடும் அரக்கர்களும் அந்த குதிரையின் முதுகில் பயணித்தனர். ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் கூட ராஜ்குமார் நடித்துள்ளார். கர்நாடகாவில் எந்த மூலைக்கு சென்றாலும் அந்த குதிரைக்கு அபார வரவேற்பு கிடைத்தது.

ராஜ்குமார் மறைவுக்கு பிறகு இந்த அசுரர்களும், ஞானிகளும் எந்த ஒரு குதிரை மீதும் ஏறவில்லை. ஏனெனில் அதுபோன்ற கனமான பாத்திரங்களை சுமக்கும் சக்தி ரஜினிகாந்த் உட்பட வேறு எந்த குதிரைக்கும் (நடிகர்களுக்கும்) இல்லை. ஓடி, ஓடி களைப்படைந்த அந்த குதிரை, தனது தாய் மண்ணில் ஓய்வெடுக்கலாம் என்று சென்றது.

ஆனால், அந்த குதிரையை வனதேவதையும் பார்க்க ஆசைப்பட்டாள். எனவேதான் 108 நாள் வனதேவதையுடன் (வீரப்பன் கடத்தல் சம்பவம்) அவர் இருந்தார்.

எனக்கு 11 வயதாக இருக்கும்போது நான் பள்ளிக்கூடம் சென்ற காலகட்டத்தில் ராஜ்குமாரிடம் ஆட்டோகிராப் வாங்கினேன். அதன்பிறகு வாழ்க்கையிலேயே இதுவரை வேறு யாரிடமும் நான், ஆட்டோகிராப் வாங்கியதில்லை.

பெங்களூரு டாடா இன்ஸ்டிடியூட்டிற்கு ஒருமுறை ராஜ்குமாருடன் சென்றிருந்தேன். அப்போது ராஜ்குமாரை பார்த்த மக்கள் அவரிடம் வந்து வணக்கம் செலுத்தி நலம் விசாரித்து சென்றனர். அப்போது என்னை பார்த்து ராஜ்குமார் ஒருவார்த்தை கேட்டார். ஏன் எனக்கு அவர்கள் வணக்கம் செலுத்துகிறார்கள் தெரியுமா என்றார்? நான் அதற்கு, உங்களுக்கு மரியாதை கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுப்பார்கள் என்று பதிலுக்கு கேட்டேன்.

அதற்கு ராஜ்குமார் சிரித்துக் கொண்டே, "மக்கள் எனக்கு மரியாதை தருகிறார்கள் என்றா நினைத்தாய். எனக்குள் உள்ள சரஸ்வதிக்குதான் அவர்கள் மரியாதை தருகின்றனர். அந்த கலைவாணியால்தான் நடிப்பு நமக்கு சாத்தியப்பட்டுள்ளது. ரசிகர்களை நம்மை பார்த்து கை தட்டுவதை நமக்கு கிடைக்கும் மரியாதை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால் நமக்கு அகங்காரம் வந்துவிடும். கலாதேவிக்கே அனைத்து புகழும் சென்றடைய வேண்டும்" என்றார்.

எந்த ஒரு கட்சியிலும் சேராமல், அரசியலில் குதிக்காமல் மக்களுக்கு நன்மை செய்யமுடியும் என்று நிரூபித்தவர் ராஜ்குமார். ராஜ்குமார் இறந்ததும் உடனே என்னால் வர முடியவில்லை. ராஜ்குமார் மறைவின்போது அனைத்து ரசிகர்களும் தங்கள் கையால் அவரது சமாதியில் மண்போட வேண்டும் என்று கலாட்டா செய்தனர். இனியாவது ரசிகர்கள் அமைதியாக இருங்கள்.

ராஜ்குமார் நினைவிடத்தில் ஒரு ரிஷி படுத்துள்ளார் என்று நினையுங்கள். மவுனமாக வாருங்கள். போய் அவரிடம் பேசுங்கள். உங்களுக்கு ஆசி வழங்குவார். வருங்காலத்தில் இது ஒரு கோயிலாக மாறி உங்களுக்கு ஆசி வழங்கும். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

விமல் - அஞ்சலி நடிக்கும் மாப்ள சிங்கம்.. படப்பிடிப்பு ஆரம்பம்!

விமல் - அஞ்சலி மூன்றாம் முறையாக இணையும் மாப்ள சிங்கம் படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது.

விண்ணைத்தாண்டி வருவாயா, அழகர்சாமியின் குதிரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா, மான் கராத்தே ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் கயல் படத்தைத் தயாரித்து வரும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி லிட் பட நிறுவனம் சார்பில் பி. மதன் தயாரிக்கும் புதிய படம் - மாப்ள சிங்கம்.

விமல் - அஞ்சலி நடிக்கும் மாப்ள சிங்கம்.. படப்பிடிப்பு ஆரம்பம்!

தூங்கா நகரம், கலகலப்பு படங்களுக்குப் பிறகு விமல், அஞ்சலி இருவரும் ஜோடியாக நடிக்கும் படம் இது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா வெற்றிப் படங்களைத் தொடர்ந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி லிட் பட நிறுவனத்துடன் விமல் இணையும் மூன்றாவது படம் இது.

விமல் - அஞ்சலி நடிக்கும் மாப்ள சிங்கம்.. படப்பிடிப்பு ஆரம்பம்!

மாப்ள சிங்கம் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ராஜசேகர். இவர் இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

மாப்ள சிங்கம் படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார்.

ராதாரவி, மனோபாலா, மயில்சாமி, 'முனீஸ்காந்த்' ராம்தாஸ், காளி வெங்கட், சிங்கமுத்து, சுவாமிநாதன், விஷ்ணு, மதுமிலா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூஸிக் ஸ்கூலின் வைஸ் பிரின்ஸிபால் ஆடம் க்ரீக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விமல் - அஞ்சலி நடிக்கும் மாப்ள சிங்கம்.. படப்பிடிப்பு ஆரம்பம்!

ரகுநந்தன் இசையமைக்கிறார். டான் அசோக் வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார். இணை தயாரிப்பு : ஜேம்ஸ்

அனகாபுத்தூர் முருகன் கோவிலில் பூஜையுடன் மாப்ள சிங்கம் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. தொடர்ந்து சென்னையில் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

ஹெல்மெட் போடுங்க... விஜய்க்கு அட்வைஸ் பண்ண அஜீத்!

இப்போதெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிளில் வரும் வழக்கம் முன்னணி நடிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

ஆர்யா சைக்கிளில்தான் தினமும் படப்பிடிப்புக்கு வருகிறாராம். வேலை நடந்த மாதிரி, உடற்பயிற்சியும் செய்த மாதிரி...

ஹெல்மெட் போடுங்க... விஜய்க்கு அட்வைஸ் பண்ண அஜீத்!

அஜீத் பற்றி கேட்கவே வேண்டாம். நினைத்தால் தனது டுகாட்டியை எடுத்துக் கொண்டு அச்சரப்பாக்கம் ஹெலிபேட் பக்கமோ, பெங்களூர் நெடுஞ்சாலையிலோ விரைவது அவர் வழக்கம்.

இப்படி பலரும் தங்கள் இரு சக்கர வாகன ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்க, விஜய் மட்டும் சும்மா இருப்பாரா என்ன?

அவர் புதிதாக வாங்கியிருக்கும் இருசக்கர வாகனம், ஹார்லி டேவிட்சன். கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடக்கும் தனது படப்பிடிப்புக்கு இந்த புத்தம் புதிய பைக்கில்தான் சில தினங்களாகப் போய் வந்தாராம். முகத்தில் கர்ச்சீப் கட்டியபடி விருட்டென்று தங்களைக் கடக்கும் விஜய்யை பலரும் பார்த்து, 'டே.. நம்ம விஜய்டா..' என்று வாய் பிளந்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்த தகவல் அஜீத்துக்கு தெரிய வந்திருக்கிறது. உடனே தன் நண்பனை போனில் அழைத்த அஜீத், 'பைக்ல போறது ஜாலியாதான் இருக்கும். கொஞ்சம் ஹெல்மட் போட்டுக்கிட்டு ஓட்டுனீங்கன்னா சேஃப்...' என்றாராம்.

The Hunger Games Mockingjay – Part 1 Review

Read more »

Zed Plus Review

Read more »

Zed Plus First Day Box Office Collection: Washout

Read more »

Happy Ending Eight Days Box Office Collections: Crashes on second friday

Read more »

Bollywood Box Office Collection 2014 Report with Cost & Profit (Hit ya Flop)

Read more »

Friday, 28 November 2014

Penguins of Madagascar Review

Read more »

Horrible Bosses 2 Review

Read more »

Varun Dhawan in an Angry Look from Badlapur First Look poster

Read more »

Star Wars: Episode VII - The Force Awakens Teaser Trailer

Read more »

Kaaviya Thalaivan Review

Read more »

கோவை ஏரியாவில் மட்டும் 85 அரங்குகளில் லிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை

வெளியாவதற்கு முன்பே பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது ரஜினியின் கோவை ஏரியாவில் மட்டும் 85 அரங்குகளில் லிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை  

தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு உலகம் முழுவதும் 5000க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம். தமிழகத்தில் உள்ள 950 அரங்குகளில் 700 அரங்குகளுக்கு மேல் லிங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சாதனையாக, ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள மொத்த தியேட்டர்களுமே லிங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கோயமுத்தூர் - திருப்பூர் ஏரியாவில் மட்டும் மொத்தம் 93 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் 85 அரங்குகளில் லிங்காதான் ரிலீசாகப் போகிறது. இதற்கு முன் எந்த ரஜினி படத்துக்கும் இத்தனை அரங்குகள் கோவை ஏரியாவில் ஒதுக்கப்பட்டதில்லை. வேறு எந்தப் படத்துக்கும் இவ்வளவு அரங்குகள் ஒதுக்கப்படுமா என்பதும் சந்தேகம்தான்.

லிங்காவின் கோவை பகுதி உரிமை மட்டும் தனியாக விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy Ending Overseas Country-wise Box Office Collection: 18th Highest of 2014

Read more »

New Movies Releasing This Week Nov 28

Read more »

சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகம்... பாரதிராஜா மகன் இயக்குகிறார்!

சிகப்பு ரோஜாக்கள் படத்தின் 2-ம் பாகத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குகிறார்.

பாரதிராஜா இயக்கத்தில் 1978-ல் வெளிவந்து மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய வெற்றிப் படம் சிகப்பு ரோஜாக்கள். பாக்யராஜ் கதை எழுதியிருந்தார்.

சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகம்... பாரதிராஜா மகன் இயக்குகிறார்!

கமல் சைக்கோ கொலையாளி கேரக்டரில் நடித்து இருந்தார். ஸ்ரீதேவிதான் கதாநாயகி. இளையராஜாவின் இனிமையான பாடல்கள், மிரட்டல் இசை, பாரதிராஜாவின் மிகச் சிறந்த இயக்கம் அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை 175 நாட்கள்வரை ஓட வைத்தது.

இந்த படத்தில் இடம் பெற்ற நினைவோ ஒரு பறவை, இந்த மின் மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது ஆகி இரண்டு பாடல்களும் இடம் பெறாத நிகழ்ச்சிகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகம்... பாரதிராஜா மகன் இயக்குகிறார்!

இதே படம் இந்தியில் ரெட் ரோஸ் என்ற பெயரில் பாரதிராஜாவால் ரீமேக் செய்யப்பட்டது.

இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கமல் கேரக்டரில் விசாகன் நடிக்கிறார். பாரதிராஜா மகன் மனோஜ், தன் பெயரை மனோஜ் பாரதிராஜா என்று மாற்றிக் கொண்டு செய்கிறார்.

இந்தப் படத்துக்கு சிகப்பு ரோஜாக்கள் 2 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஞ்ஞானி - விமர்சனம்

எஸ் ஷங்கர்

நடிப்பு: பார்த்தி, மீரா ஜாஸ்மின், விவேக், போஸ் வெங்கட்

இசை: மாரீஸ் விஜய்

தயாரிப்பு- இயக்கம்: பார்த்தி

சமீபகாலமாக விவசாயத்தின் முக்கியத்துவம், அதைக் காக்க வேண்டியதன் அவசியம் குறித்து அதிக அளவு படங்கள் வர ஆரம்பித்திருப்பதைப் பார்க்க சந்தோஷமாக உள்ளது. இந்தப் படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபீசில் நல்ல மகசூலைத் தருமா தராதா என்பதையெல்லாம் இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, விவசாயத்தைப் பேசுபொருளாக்கிப் பார்க்கும் இந்த புதிய படைப்பாளிகளை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

தமிழனை விட சிறந்த விஞ்ஞானி, சிறந்த விவசாயி, சிறந்த இலக்கியவாதி யாருமில்லை என்றால், உடனே தமிழ் தீவிரவாதம் என்பார்கள் சிலர். தம் இனப் பெருமை என்னவென்பதை உணரும் திராணியற்றவர்கள் இவர்கள்.

விஞ்ஞானி - விமர்சனம்

இந்த விஞ்ஞானி படத்தை எடுத்துள்ள பார்த்தி ஒரு நிஜமான விஞ்ஞானி. நாசாவில் பணியாற்றியவர். தமிழ் இலக்கியத்தின் ஆதியான தொல்காப்பியத்தை ஆய்ந்து, உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானி, விவசாயி தொல்காப்பியர்தான் என்ற முடிவுக்கு வந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். அதை எப்படி எடுத்திருக்கிறார் என்பது விமர்சனத்துக்குரியதுதான். ஆனால் இப்படி ஒரு சிந்தனையை ஆதாரங்களோடு சினிமாவாக்கியதற்காக அவருக்கு வாழ்த்துகள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப் பாட்டன் தொல்காப்பியன், வகை வகையாக நெல்லைக் கண்டுபிடித்திருக்கிறார். ஒன்றிரண்டல்ல... கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் அதிகமான நெல் வகைகள். ஒவ்வொரு நெல்லுக்கும் ஒரு விசேஷ குணம். இனவிருத்திக்கு, உடல் பலத்துக்கு, நா ருசிக்கு என பல வகை நெல். அதில் ஒன்றுதான் தாகம் தீர்த்தான் நெல்.

விஞ்ஞானி - விமர்சனம்

இந்த நெல்லின் விசேஷம், மிகக் குறைந்த தண்ணீர் இருந்தாலே போதும், குறைந்த நாட்களில் ஒரு போகம் விளைவித்துவிட முடியும். தம் எதிர்காலத் தலைமுறை பஞ்சத்தில், வறட்சியில் தவிக்கும் காலம் வரும் என்பதை முன்னுணரும் தொல்காப்பியர், இந்த தாகம் தீர்த்தான் நெல்லின் தேறிய விதைகளை ஒரு கல்பானையில் போட்டு புதைத்து வைக்கிறார். யாராவது ஒரு நல்லவன் கையில் அது கிட்டும், மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற கணிப்பில்.

விஞ்ஞானி - விமர்சனம்

நிகழ்காலம்... நெற்களஞ்சியமான தஞ்சை வறட்சியின் பிடியில். மக்கள் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு எழுதிக் கொடுக்கும் நெருக்கடி. அப்போதுதான் அந்த ஊரில் உள்ள மீரா ஜாஸ்மின் குடும்பத்தினருக்கு புதையலாகக் கிடைக்கிறது இந்த தாகம் தீர்த்தான் நெல் வைத்திருக்கும் கல்பானை. கூடவே தொல்காப்பியர் எழுதி வைத்திருக்கும் கல்வெட்டும் கிடைக்கிறது. அந்த நெல்லை மட்டும் உயிர்ப்பித்துவிட்டால், தமிழகமே நெற்களஞ்சியமாக மாறும் நிலை.

இந்த நெல்லுக்கு உயிர்கொடுக்கத் தகுதியான விஞ்ஞானியைத் தேடிப் போகிறார்கள். நாயகன் பார்த்தி இதில் தேர்ந்த விஞ்ஞானி என்பதால் அவரிடம் போய், நெல்லைக் காட்டி உயிர்ப்பிக்கக் கோருகிறார்கள் ஆனால் அவர் மறுத்து விரட்டிவிடுகிறார்.

விஞ்ஞானி - விமர்சனம்

அந்த விஞ்ஞானி பார்த்தி, மீரா ஜாஸ்மின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்தான் என்பது தெரிகிறது. உடனே, விஞ்ஞானியை மணந்து, அவர் மனதை மாற்றி, நெல்லுக்கு உயிர் கொடுக்கும் ஆய்வில் இறங்க வைக்க திட்டம் போடுகிறார் மீரா ஜாஸ்மின்.

திட்டப்படி அவரைத் திருமணமும் செய்கிறார். ஆனால் அதற்குப்பிறகு நடப்பதெல்லாம் அவர் எதிர்ப்பார்த்ததற்கு மாறாகவே அமைகின்றன. ஒரு கொலைப் பழி வேறு விழுகிறது. இதிலிருந்து தப்பித்தாரா? நெல்லுக்கு உயிர் கொடுக்கும் முயற்சி என்னவானது என்பதெல்லாம் சுவாரஸ்யமற்ற மீதிக் கதை.

விஞ்ஞானி - விமர்சனம்

தொடக்க ஓவரில் பிரமாதமாக விளாசிய பேட்ஸ்மேன், பின்னர் ஒரேயடியாக சொதப்புவது மாதிரிதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் பார்த்தி.

தொல்காப்பியர், அவர் கண்டு பிடித்த நெல் வகைகள் போன்றவற்றைச் சொல்லும் காட்சிகளில் ஏக மிடுக்கு, சுவாரஸ்யம். ஆனால் இவ்வளவு பெரிய விஞ்ஞானி மூவாயிரம் ஆண்டுக்கு முந்தைய நெல் விதையின் மகத்துவம் தெரியாமல், திட்டி விரட்டுவது சரியா?

கிடைத்தது நெல்லாகவே இருந்தாலும் அது அரசாங்க சொத்தாயிற்றே.. அதை இவர்கள் பாட்டுக்கு எடுத்துக் கொண்டு ஊர் ஊராகப் போக போலீஸ் எப்படி அனுமதித்தது?

சஞ்சனா சிங் சமாச்சாரமெல்லாம் ரொம்ப பழசு. இன்னும் வித்தியாசமாக செய்திருக்கலாம்.

ஒரு ஹீரோ செய்ய வேண்டிய டூயட், சண்டை, கொஞ்சம் காமெடி என அனைத்திலும் முயற்சி செய்திருக்கிறார் பார்த்தி. ஆனால் பல காட்சிகளில் அவர் தன் முகத்தை தேமே என்று வைத்துக் கொண்டிருக்கிறார்.

மீரா ஜாஸ்மின்... அந்த பொலிவு இல்லை. டல்லடிக்கிறார். கொலைப் பழியிலிருந்து தப்பி வந்து காட்டில் தஞ்சம் புகும் காட்சிகளில், ஏதோ பிக்னிக் வந்தவர் மாதிரி ஜாலியாகத் திரிகிறார்.

விவேக்கின் காமெடியில் கொஞ்சமல்ல, ரொம்பவே 'ஏ' இருந்தாலும், படத்தின் அபத்தங்களைப் பொறுத்துக் கொள்ள உதவுகிறது. குறிப்பாக அந்த நீச்சல் குள காமெடி.

பாலா சிங், தலைவாசல் விஜய் போன்றோர் செட் ப்ராபர்ட்டிகள் மாதிரிதான். சொன்னதை ஒப்பித்திருக்கிறார்கள்.

இசையும் ஒளிப்பதிவும் பரவாயில்லை எனும் அளவுக்குதான். பார்த்தி - மீராவின் ஒரு டூயட் ஓகே.

படத்தின் இறுதியில், இந்தக் கதைக்கான ஆதாரங்கள் என பல விஷயங்களை பட்டியலிடுகிறார் இயக்குநர் பார்த்தி. அதற்கு முன் பார்த்த காட்சிகளின் அபத்தங்களை மறந்து, பெருமையாய் உணர முடிந்தது. இன்னும் கவனமெடுத்து காட்சிகளை அமைத்திருந்தால் இந்தப் படம் தமிழனுக்கு பெருமை சேர்க்கும் பட்டியலில் இடம்பிடித்திருக்கும்!

கரையோரம் படத்தில் கவர்ச்சி புயலாய் நிகிஷா

இப்பொழுதெல்லாம் கதாநாயகிகள் மரத்தை சுற்றி மட்டும் டூயட் பாடுவதில்லை. வாள் சண்டை, குதிரையேற்றம், என நாயகர்களுக்கு இணையாக வீர தீர சண்டை பயிற்சிகளை கற்றுக்கொள்கின்றனர்.

கரையோரம் என்ற திகில் படத்தில் நாயகியாக நடிக்கும் நிகிஷாவும், படத்திற்காக குதிரையேற்றம் கற்றுக்கொண்டார். கரையோரம் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரையோரம் உள்ள கோவளம் கடற்கரையில் நடைபெறுகிறது.

இப்படத்தை ஜே.கே.எஸ் என்பவர் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தமிழில் இதுதான் இவரின் முதல் படம். இப்படத்துக்கு சுஜித் ஷெட்டி இசையமைக்கிறார். ஜெய்ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங்: ஸ்ரீகாந்த், சண்டை காட்சி: கே.டி.வெங்கடேஷ்

கரையோரம் படத்தில் கவர்ச்சி புயலாய் நிகிஷா

செட் போட்டு படப்பிடிப்பு

படம் முழுவதும் கடற்கரை விடுதி ஒன்றில் நடப்பது போல படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒருமாதம் வாடகைக்காக பேசியபோது ரூ.50 லட்சம் கேட்டுள்ளனர். ஆனால் கடற்கரையோரம் உள்ள காலி இடத்தில் ரூ.40 லட்சம் செலவில் ரிசார்ட்ஸ் போல செட் போட்டு படமாக்கியுள்ளார்களாம்.

அச்சுறுத்த வரும் அனிமேசன்

இப்படத்தின் திகில் காட்சிகள் அனிமேஷனில் தயாராகிவருகிறதாம். 30 நாட்களுக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கரையோரம் படத்தில் கவர்ச்சி புயலாய் நிகிஷா

இனியா

நான் சிகப்பு மனிதன்' படத்தில் வில்லியாக நடித்த இனியா, தற்போது கரையோரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நிகிஷா பட்டேல் நாயகி

‘என்னமோ ஏதோ', ‘தலைவா' ஆகியப் படங்களில் நடித்த நிகிஷா பட்டேலும் நடிக்கிறார். இவர்களுடன் சுனிஷ் ஷெட்டி முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

கடற்கரை விடுதி கதை

சென்னையில் இருந்து மங்களூருக்கு தனது நண்பரை சந்திக்க வரும் பெண், இடையில் ஒரு கடற்கரை விடுதியில் அறை எடுத்து தங்குகிறார். அந்த பீச் ரிசார்ட்ஸில் நடக்கும் அந்த பெண் சந்திக்கும் பிரச்சனைகளை திரில்லராக சொல்லியிருக்கிறார்களாம்.

நாயகியை சுற்றி

நாயகி பற்றி நிகிஷா பட்டேலை சுற்றி சுற்றியே கதை நகருகிறது.

இந்த படத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்குமாம்.நடிப்போடு கூடுதல் கவர்ச்சியும் காட்டியுள்ளார் நிகிஷா.

கரையோரம் படத்தில் கவர்ச்சி புயலாய் நிகிஷா

8 நடிகர்கள் மட்டுமே

கணேஷ் பிரசாத், வஷிஷ்டா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சிங்கம்புலி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் காமெடி கேரக்டரில் வருகின்றனர். இந்த படத்தில் மொத்தம் எட்டு பேர் மட்டுமே நடிக்கின்றனர் என்று படம் பற்றி இயக்குநர் ஜே.கே.எஸ் கூறியுள்ளார்.

பரபரப்பான கதை

குறிப்பிட்ட இடத்தை விட்டு வெளியில் நகராமல் ஒரே இடத்தில் கதை சொல்வது என்பதே பெரியசவால். ஜனங்க சோர்ந்து போகாமலிருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் நாங்க அப்படியொருஅட்டம்ப்ட் பண்ணியிருக்கோம். அதே நேரத்தில் ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன அடுத்து என்னன்னு பரபரக்க வைக்கும் என்றார் ஜே.கே.எஸ்.

பாக்யராஜ் நடித்த துணை முதல்வர் இசை வெளியீடு... மேடையில் குவிந்த முன்னாள் நாயகிகள்!

பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயாகனாக நடிக்கும் துணை முதல்வர் படத்தின் இசையை மீனா, ராதிகா, பூர்ணிமா உள்ளிட்ட முன்னாள் கதாநாயகிகள் பலரும் வெளியிட்டு வாழ்த்தினர்.

துணை முதல்வர் படத்தை பாக்யராஜ் இயக்கவில்லை. நடிக்க மட்டும் செய்கிறார். இதில் ஜெயராமும் இன்னொரு நாயகனாக வருகிறார். ஸ்வேதாமேனன் நாயகியாக நடிக்கிறார். ரா.விவேகானந்தன் இயக்குகிறார். ஆர்.சங்கர், கே.ஜி.சுரேஷ்பாபு தயாரிக்கின்றனர்.

பாக்யராஜ் நடித்த துணை முதல்வர் இசை வெளியீடு... மேடையில் குவிந்த முன்னாள் நாயகிகள்!

முன்னாள் நாயகிகள்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை ‘சத்யம்' தியேட்டரில் நடந்தது. இதில் முன்னாள் கதாநாயகிகள் மீனா, ஊர்வசி, ரோகிணி, சுகாசினி, ராதிகா, ரேகா, ஸ்ரீப்ரியா, பூர்ணிமா, வடிவுக்கரசி, கோவை சரளா ஆகிய பத்து பேர் பங்கேற்றனர். அவர்களே பாடல் சி.டி.யையும் வெளியிட்டனர். இவர்களில் சுகாசினி தவிர மற்ற அனைவருமே பாக்யராஜுடன் நடித்தவர்கள்.

பாக்யராஜ் நடித்த துணை முதல்வர் இசை வெளியீடு... மேடையில் குவிந்த முன்னாள் நாயகிகள்!

தாய்க்குலத்துக்கே முதலிடம்

பாக்யராஜ் தன் படங்களை தாய்க்குலத்தை மனதில் வைத்தே எடுப்பது வழக்கம். அந்த சென்டிமென்ட் காரணமாக, இந்த முறை தன் படத்தின் இசை வெளியீட்டை நடிகைகளின் தலைமையில் வெளியிட்டார்.

பாண்டியராஜன்

இயக்குநர் பாண்டியராஜன் விழாவில் பங்கேற்று பேசும்போது, ‘‘சினிமாவில் ஆரம்ப காலத்தில் சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்டப்பட்டேன். அதன் பிறகு பாக்யராஜ் மூலம் வளர்ந்து பெரிய ஆளானேன்," என்றார்.

பாக்யராஜ் நடித்த துணை முதல்வர் இசை வெளியீடு... மேடையில் குவிந்த முன்னாள் நாயகிகள்!

என் குரு

ஊர்வசி பேசும் போது, சினிமாவில் நடிக்க தெரியாமல் இருந்த எனக்கு நடிப்பு சொல்லி கொடுத்து நடிகையாக்கிய குரு பாக்யராஜ் சார் என்றார்.

இயக்குநர்கள் பார்த்திபன், ஆர்.கே.செல்வமணி ஆகியோரும் விழாவில் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்கள்.

நடிகையின் நிச்சயதார்த்த செய்தியை கசியவிட்டது யார் தெரியுமா?

சென்னை: நம்பர் நடிகையின் நிச்சயதார்த்த செய்தியை ஊர், உலகத்திற்கு எல்லாம் கசியவிட்டது தொழில் அதிபர் சார் தானாம்.

நம்பர் நடிகைக்கு மார்க்கெட் முன்பு போல் இல்லாமல் டல்லடித்துள்ளது. இந்நிலையில் அவருக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரும், படத் தயாரிப்பாளருமான ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்ற செய்தி தீயாக பரவியது.
ஆனால் இதை நடிகையும், அவரது தாயும் மறுத்தனர். நிச்சயதார்த்தம் நடந்தால் உங்களுக்கு எல்லாம் சொல்லாமலா என்று தெரிவித்தார்கள்.

எனக்கு நிச்சயதார்த்தம் என்று சொல்வதை விட்டுவிட்டு வேறு ஏதாவது பற்றி பேசுங்கள், போர் அடிக்குது என்றார் நடிகை. ஆனால் திருமண செய்தி ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் தான் நடிகை இந்த செய்தியை கசியவிட்ட புண்ணியவான் யார் என்று புலன் விசாரணை நடத்தினாராம். விசாரணையில் அந்த புண்ணியவான் வேறு யாரும் இல்லை தனக்கு யாருடன் நிச்சயமானது என்று கூறப்படுகிறதோ அவரே தான் என்பது நடிகைக்கு தெரிய வந்து அப்படியே ஷாக் ஆகிவிட்டாராம்.

அடப்பாவி இந்த ஆள் செய்த வேலை தானா என்று நினைத்து அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். இந்த திருமண செய்தியால் அம்மணிக்கு வந்த பட வாய்ப்பும் பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக தன்னை பற்றிய செய்தியை கசியவிட்டு அதை மறுப்பது 'அந்த' ஹீரோவின் வேலையாச்சே.

கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!

ஐந்து இளைஞர்களுக்கும், ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. அதை சமாளிக்க முடியாமல் நண்பர்கள் திருட்டுரயில் ஏறிச்செல்லும் சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். சென்னையில் இறங்கிய பின் அதைவிட பெரும் பிரச்சனை அவர்களுக்கு காத்திருந்தது. அதிலிருந்து நண்பர்கள் மீண்டார்களா..? இல்லையா...? என்பதுதான் திருட்டு ரயிலின் கதை.

கருணாநிதியின் குடும்பத்து வாரிசு ஒருவர் திருட்டு ரயில் படத்தில் அறிமுகமாகிறார். மகன் மு.க.முத்து தொடங்கி பேரன்கள் உதயநிதி, துரை தயாநிதி, அருள்நிதி வரை கருணாநிதியின் குடும்பத்து வாரிசுகள் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர்.

கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!

ரக்ஷன்-கேத்தி

அந்த வரிசையில் தமிழ் சினிமாவிற்கு புதிதாக அறிமுகமாகிறார் நாயகன் ரக்ஷன். இவர்களுடன், சரண் செல்வம் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க, கேத்தி ஹீரோயினாக நடிக்கிறார்.

கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!

திருப்பதியின் திருட்டுரயில்

எஸ்.எஸ்.எஸ் மூவிஸ் சார்பில் எ.எஸ்.டி. சலீம் மற்றும் அணு மூவிஸ் பி.ரவிக்குமார் தயாரிக்கும் இப்படத்தை திருப்பதி என்பவர் இயக்குகிறார். ஜெயப்ரகாஷ் இசையமைக்க, விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.திருப்பதி இயக்கும் இரண்டாவது படம்தான் திருட்டு ரயில். இவர் ஏற்கனவே முத்துநகரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!

கூத்துப்பட்டறை நாயகன்

திருட்டுரயில் படத்தினை முதல்பாதி காமெடியாகவும் அடுத்த பாதியை சீரியஸாகவும் இயக்கியுள்ளாராம். ரக்ஷன் சிறுவயதில் இருந்தே திருப்பதிக்கு தெரிந்தவராம். கூத்துப்பட்டறையில் பயிற்சியும் பெற்றுள்ளாராம்.

மயில்சாமி-சென்ராயன்

இவர்களுடன் மயில்சாமி, சென்ராயன், ரவிக்குமார், பிரஷாந்த், பாலாஜி, சண்முகராஜன், இமான் அண்ணாச்சி, , சிவகுமார், பிளாக் பண்டி, தீப்பெட்டி கணேசன், அருள் ஜோதி, ராஜேந்திரன், பிரதீப் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!

சென்னை கதை களம்

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.

எப்படி வாரிசு

அது சரி ரக்ஷன் எப்படி கருணாநிதியின் குடும்பத்தின் வாரிசு என்று கேட்பவர்களுக்கு, உதயநிதியின் தாய்மாமா அதாவது தாய் துர்காவின் அண்ணன் மகன்தான் இந்த ரக்ஷன் என்கின்றனர். எப்படியோ கருணாநிதியின் குடும்பத்து வாரிசை திருட்டு ரயிலில் ஏற்றிவிட்டார் இயக்குநர் திருப்பதி.

என் தங்கச்சி சக நடிகையை அடித்தாரா?: பிரியங்கா சோப்ரா வக்காலத்து

மும்பை: தனது தங்கை மன்னாரா சக நடிகை ஸ்ரத்தா தாஸை குச்சியால் அடிக்கவில்லை என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் தங்கை மன்னாராவும் நடிகையாகியுள்ளார். அவர் படுகவர்ச்சி காட்டி நடித்துள்ள ஜித் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய படத்தில் மன்னாராவுடன் ஸ்ரத்தா தாஸும் நடித்துள்ளார். படத்தில் ஒரு காட்சியில் மன்னாரா குச்சியை வைத்து ஸ்ரத்தாவை தாக்கும் காட்சி உள்ளது. இந்த காட்சியை படமாக்கியபோது மன்னாரா தன்னை நிஜமாகவே அடித்துவிட்டதாக ஸ்ரத்தா குற்றம் சாட்டியிருந்தார்.

என் தங்கச்சி சக நடிகையை அடித்தாரா?: பிரியங்கா சோப்ரா வக்காலத்து

இந்நிலையில் ஜித் படம் தொடர்பான நிகழ்ச்சியில் மன்னாராவுடன், பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டார். அப்போது ஸ்ரத்தா குற்றச்சாட்டு பற்றி செய்தியாளர்கள் மன்னாரா மற்றும் பிரியங்காவிடம் கேட்டனர்.

அதற்கு மன்னாரா கூறுகையில்,

ஸ்ரத்தா ஒரு நல்ல நடிகை. படத்தில் அவருக்கு முக்கியமான வேடம் அளிக்கப்பட்டுள்ளது. அவரை யாரும் நிஜத்தில் அடிக்கவில்லை. படக்குழுவினர் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றார்.

பிரியங்கா கூறுகையில்,

ஸ்ரத்தாவை யாரும் நிஜத்தில் அடிக்கவில்லை. அடிக்கும் காட்சியை தான் படமாக்கினர். சிலநேரம் விபத்துகள் நடக்கத் தான் செய்யும் என்றார்.

'ஆம்பள' படப்பிடிப்பில் விபத்து: விஷால் காயம்

சென்னை: ஆம்பள படப்பிடிப்பில் சண்டை காட்சியை படமாக்கியபோது விஷால் காயம் அடைந்தார்.

விஷால் தற்போது சுந்தர் சி. இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹன்சிகா, மதுரிமா உள்பட 3 நாயகிகள். படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து வருகிறது. சுந்தர் சண்டை காட்சி ஒன்றை படமாக்கினார்.

'ஆம்பள' படப்பிடிப்பில் விபத்து: விஷால் காயம்

சண்டை காட்சியில் விஷால் வில்லனுடன் மோத வேண்டும். டூப் போடாமல் அவரே நடித்தார். விஷாலின் உடம்பில் கயிறு கட்டி அவர் வில்லனுடன் ஆக்ரோஷமாக மோதும் காட்சியை படமாக்கினர். விஷால் கயிறு மூலம் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். அப்போது கயிறு அறுந்து விழவே உயரத்தில் இருந்து விஷால் கீழே விழுந்தார். இதில் அவர் காயம் அடைந்தார். அவரது உடலில் ஆங்காங்கே சிராய்ப்பு ஏற்பட்டது.

இதை பார்த்த படக்குழு அதிரிச்சி அடைந்தது. விஷாலை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து அன்றைய படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

முன்னதாக பூஜை படப்பிடிப்பிலும் விஷாலுக்கு காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

'சீரியல் கிஸ்ஸர்' இம்ரான் ஹஷ்மி சன்னி லியோனுடன் நடிக்க விருப்பம்

மும்பை: பாலிட் நடிகர் இம்ராஷ் ஹஷ்மி முன்னாள் ஆபாச பட நடிகையான சன்னி லியோனுடன் சேர்ந்து நடிக்க தயாராக உள்ளாராம்.

இம்ரான் ஹஷ்மி, கங்கனா ரனௌத் உள்ளிட்டோர் நடித்துள்ள உங்ளி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த பட ஹீரோ இம்ரான் ஹஷ்மி பற்றி உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறோம். தெரியாதவர்களுக்காக இந்த சிறிய விளக்கம். இம்ரான் ஹஷ்மி படங்கள் என்றால் உதட்டோடு உதட்டை வைத்து அழுத்தி நச்சென்று இச் கொடுக்கும் காட்சிகள் கட்டாயமாக இருக்கும்.

சான்ஸ் கிடைத்தால் சன்னிக்கு லிப் டூ லிப் கொடுக்க இம்ரான் ஹஷ்மி தயார்  

இது தவிர ஹீரோயினுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளுக்கும் குறைவே இருக்காது. இந்த விஷயத்தில் இம்ரான் மிகவும் தாராளமானவர். அப்படிப்பட்டவருடன் அளவை தாண்டி கவர்ச்சி காட்டும் சன்னி லியோன் நடித்தால் எப்படி இருக்கும். சில கவர்ச்சி படங்கள் எல்லாம் இம்ரான், சன்னி நடிக்கும் படத்திடம் பிச்சை எடுக்க வேண்டும்.

இம்ரானோ உங்ளி படத்தில் சன்னி லியோனுடன் நடிக்க முடியாது என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

சன்னி லியோனுடன் நடிக்க மாட்டேன் என்று நான் கூறவில்லை. அது வெறும் வதந்தி. தயாரிப்பாளர்கள் சன்னியை அணுகியபோது எங்கள் டேட்ஸ் ஒத்துப் போகவில்லை. டேட்ஸ் பிரச்சனையால் தான் அவருடன் நடிக்கவில்லை. நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

கத்தி படத்தில் லைகா பெயரைப் போடலாம்.. மீறி அச்சுறுத்தினால் தண்டனை! - நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜய் நடித்த, 'கத்தி' படத்தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை, படத்திலும், விளம்பரங்களிலும் வைத்துக் கொள்ள, பாதுகாப்பு வழங்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, தி.நகரில் உள்ள, லைகா தயாரிப்பு நிறுவனம், 'கத்தி' படத்தை தயாரித்தது. நடிகர் விஜய் நடித்த இந்தப் படத்தை, வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. 'இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர்களால், லைகா தயாரிப்பு நிறுவனம் நடத்தப்படுகிறது; 'கத்தி' படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என, சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

கத்தி படத்தில் லைகா பெயரைப் போடலாம்.. மீறி அச்சுறுத்தினால் தண்டனை! - நீதிமன்றம் அதிரடி

கடந்த மாதம், 20ம் தேதி, இரண்டு சினிமா தியேட்டர்கள் தாக்குதலுக்கு ஆளாகின. இதையடுத்து, படத்தின் பிரின்ட்களிலும், விளம்பரங்களிலும், 'லைகா' பெயரை பயன்படுத்த மாட்டோம் என, நிறுவனம் சார்பில், கடிதம் அளிக்கப்பட்டது.

லைகா மனு

அதைத் தொடர்ந்து, படமும் வெளியானது. இந்நிலையில், கடந்த, 7ம் தேதி, உள்துறை செயலருக்கும், டி.ஜி.பி.,க்கும், லைகா நிறுவனம் சார்பில், மனு அளிக்கப்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அப்போதுதான், நிறுவனத்தின் பெயரை, படத்திலும், விளம்பரத்திலும் வெளியிட முடியும் என, மனுவில் கூறப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்திலும், லைகா தயாரிப்பு நிறுவனம், மனுத் தாக்கல் செய்தது.

தீர்ப்பு

மனுவை, நீதிபதி ராமசுப்ரமணியன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜரானார். நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு:

ஒரு கட்சியின் தலைவருக்கு, மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில், 'நியாயமான கோரிக்கையை ஏற்கிறோம்; உணர்வுகளை மதிக்கிறோம்; படம் மற்றும் விளம்பரங்களில் இருந்து, நிறுவனத்தின் பெயரை நீக்க, ஒப்புக் கொள்கிறோம்' என, கூறப்பட்டுள்ளது.

சென்சார் அனுமதித்த பிறகு...

இதுபோன்ற கடிதங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்க முடியாது. ஒரு படத்தை திரையிட, சென்சார் போர்டு சான்றளித்து விட்டால், மதம், ஜாதி, இனம், மொழி உணர்வுகளை காரணம் காட்டி, மீண்டும் தணிக்கை செய்ய, எந்த அமைப்பும் கோர முடியாது.

பிளாக்மெயில்

படத்தை வெளியிட சான்றளிக்கப்பட்ட பின், வசனம், காட்சிகள், தலைப்புகளை நீக்கும்படி கோருகிற அமைப்புகளின் நடவடிக்கையானது, 'பிளாக்மெயில்' போன்றதாகும். இத்தகைய மிரட்டல், வெற்றி பெற, அரசு அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு வெற்றி பெற அனுமதித்தால், சகிப்புதன்மை இல்லாத சிலரிடம், ஆட்சி அதிகாரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், சரண்டர் செய்வதற்கு வழிவகுத்து விடும்.

எதிர்ப்பு சரிதானா?

இலங்கை அதிபருக்கு நெருக்கமானவர்கள் என, படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்த அமைப்புகள், அந்த படத்தின் மூலம், அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு வருமானம் கிடைப்பதை எதிர்க்கவில்லை. படத்தை மக்கள் பார்ப்பதற்கும், அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. படத்தின் மூலம் அதிக வசூலாகி உள்ளது என, பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அதன் மூலம், படத்துக்கு, சென்சார் போர்டு அல்லது மக்கள் தரப்பில், எந்த எதிர்ப்பும் இல்லை என்பதை காட்டுகிறது.

மக்களைத் தடுக்க முடியவில்லையே!

எந்த அமைப்பிடம், மனுதாரர் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டதோ, படத்தை நிராகரிக்கும்படி தமிழக மக்களை, அந்த அமைப்பால் கேட்க முடியவில்லை. தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை அகற்றியதால், அந்த அமைப்பும் சந்தோஷப்பட்டு கொண்டது. எனவே, கொள்கை அடிப்படையில், எதிர்ப்பு இல்லை.

லைகாவுக்கு பாதுகாப்பு கொடுங்க

தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை, படத்திலும், விளம்பரத்திலும் வெளியிட ஏதுவாக, மனுதாரருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். யாராவது அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், அவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஈழப் போரில் உயிர் தப்பியவர் உருவாக்கும் விடுதலை புலிகள் பற்றிய புதிய படம்!

இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அவர்களின் போராட்டங்களை மையமாக கொண்டு பல ஆவண மற்றும் திரைப் படங்கள் கடந்த காலங்களில் வெளி வந்துள்ளன. சமீபத்தில் கூட புலிப்பார்வை என்ற தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஈழப் போரில் உயிர் தப்பியவர் உருவாக்கும் விடுதலை புலிகள் பற்றிய புதிய படம்!

இதோ அடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, ஈழப் போரில் உயிர் தப்பிய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மைன்பீல்டு (கண்ணிவெடி பகுதி) என்ற பெயரில் படம் ஒன்றைத் தயாரிக்கிறார். இதனை ஷிலாதித்யா போரா என்பவர் இயக்குகிறார். அவருக்கு இது முதல் படம்.

இந்த படத்தை அடுத்த ஆண்டு தொடங்கத் திட்டமிட்டுள்ளார் போரா. படத்தின் கதையானது தமிழ் படதயாரிப்பாளர் ஒருவரை பற்றியது. அவர் விடுதலை புலிகள் இயக்க தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனைச் சந்திக்கிறார்.

பிரபாகரனின் கருத்துகள் தயாரிப்பாளருக்கு ரொம்பப் பிடித்துப் போக, படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற தனது கனவை விட தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்ற கனவே மிக முக்கியமானது என பிரபாகரன் அவருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.

ஈழப் போரில் உயிர் தப்பியவர் உருவாக்கும் விடுதலை புலிகள் பற்றிய புதிய படம்!

இதைத் தொடர்ந்து இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்து 25 வருடங்கள் வரை தனது வாழ்வினைச் செலவிடுகிறார். அந்த இயக்கத்தின் கொள்கையை விளக்கும் படங்களைத் தயாரிக்கிறார் என்று போகிறதாம் கதை.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவரான படதயாரிப்பாளர் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அவரது அடையாளத்தை மறைத்தே படத்தில் காட்டவிருக்கிறார் போரா.

இந்தியா-இலங்கை-விடுதலைப் புலிகள் என்ற கோணத்தைத் தாண்டி இது ஒரு மனிதன் குறித்த பதிவு. ஒருவரது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை வைத்து படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இது ஓர் ஆவண படம் அல்ல என்கிறார் போரா.

வருகிற பிப்ரவரி-மார்ச் 2015ல் படம் திரைக்கு வரும். இலங்கை மற்றும் கேரளாவில் இதற்கான படப்பிடிப்பு நடக்கும். இது முதல் படமாக இருந்தாலும் தனக்கு மிக முக்கியமானது என்றும் அவர் கூறுகிறார்.

ஈழப் போரில் உயிர் தப்பியவர் உருவாக்கும் விடுதலை புலிகள் பற்றிய புதிய படம்!

இந்த படத்தின் ஒளிப்பதிவை கேங்ஸ் ஆப் வாசிபூர், பாம்பே வெல்வெட் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜீவ் ரவி மேற்கொள்கிறார். பெரும்பான்மையான மணிரத்னம் படங்களில் பணியாற்றியுள்ள ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். படத்திற்கான ஒலிப்பதிவு பணிகளை ரசூல் பூக்குட்டி செய்கிறார்.

படத்தில் எந்த சார்பு நிலையும் எடுக்காமல், நடந்ததை அப்படியே பதிவு செய்வதாகக் கூறியுள்ளார் போரா. பார்க்கலாம்!

34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக பாரதிராஜா

34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. இந்தப் படத்தை என்வி நிர்மல்குமார் இயக்குகிறார்.

ஓம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாரதிராஜா தனது மனோஜ் கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக பாரதிராஜாவுடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கங்கை அமரன் பாடல்கள் எழுதுகிறார்.

34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக பாரதிராஜா

ஒரு வயதான தந்தைக்கும் அவர் மகனுக்குமான பாசப் போராட்டத்தைச் சொல்லும் படம் இது என்கிறார்கள். படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் அமெரிக்காவில் நடக்கவிருக்கிறது.

பாரதிராஜா இயக்குநராவதற்கு முன், ஹீரோவாகத்தான் முயற்சி செய்தார். அப்போது அந்த ஆசை நிறைவேறவில்லை. புகழ்பெற்ற இயக்குநரான பின்னர் 1980-ல் கல்லுக்குள் ஈரம் படத்தில் நாயகனாக நடித்தார். அந்தப் படத்தை பாரதிராஜா மேற்பார்வையில் நிவாஸ் இயக்கினார். படமும் பாடல்களும் சிறப்பாக அமைந்தும் படம் சுமாராகத்தான் போனது. அதற்குப் பிறகு ஹீரோவாக அவர் நடிக்கவில்லை.

34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக பாரதிராஜா

தாவணிக் கனவுகள், ஆயுத எழுத்து, ரெட்டைச் சுழி, பாண்டிய நாடு படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்தார். தாவணிக் கனவுகள் மற்றும் பாண்டிய நாடு படங்களில் அவர் பாத்திரம் சிறப்பாக அமைந்தது.

34 ஆண்டுகளுக்குப் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் பாரதிராஜா.